thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalபுணர்ச்சி மகிழ்தல்Punarchchimakizhdhal
குறள் 1102

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்நோய்க்குத் தானே மருந்து.

Pinikku Marundhu Piraman Aniyizhai

Thannoikkuth Thaane Marundhu

The cure for ailment is somewhere For fair maid's ill she is the cure

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

SP (சாலமன் பாப்பையா)

நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.

MK (மு.கருணாநிதி)

நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்

Couplet

Disease and medicine antagonists we surely see;This maid, to pain she gives, herself is remedy

Explanation

The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure