thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalபுணர்ச்சி மகிழ்தல்Punarchchimakizhdhal
குறள் 1101

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள.

Kantukettu Untuyirththu Utrariyum Aimpulanum

Ondhoti Kanne Ula

In this bangled beauty dwell The joys of sight sound touch taste smell

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

SP (சாலமன் பாப்பையா)

விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு.

MK (மு.கருணாநிதி)

வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்; கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன

Couplet

All joys that senses five- sight, hearing, taste, smell, touch- can give,In this resplendent armlets-bearing damsel live

Explanation

The (simultaneous) enjoyment of the five senses of sight, hearing, taste, smell and touch can only be found with bright braceleted (women)