கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
Kannotu Kaninai Nokkokkin Vaaichchorkal
Enna Payanum Ila
The words of mouth are of no use When eye to eye agrees the gaze
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.
SP (சாலமன் பாப்பையா)
காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.
MK (மு.கருணாநிதி)
ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன
Couplet
When eye to answering eye reveals the tale of love,All words that lips can say must useless prove
Explanation
The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers)