thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalபுணர்ச்சி மகிழ்தல்Punarchchimakizhdhal
குறள் 1103

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு.

Thaamveezhvaar Mendrol Thuyilin Inidhukol

Thaamaraik Kannaan Ulaku

Is lotus-eyed lord's heaven so sweet As sleep in lover's arms so soft?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ.

SP (சாலமன் பாப்பையா)

தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?

MK (மு.கருணாநிதி)

தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?

Couplet

Than rest in her soft arms to whom the soul is giv'n,Is any sweeter joy in his, the Lotus-eyed-one's heaven

Explanation

Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?