thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalகுடிசெயல் வகைKutiseyalvakai
குறள் 1023

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்.

Kutiseyval Ennum Oruvarkuth Theyvam

Matidhatruth Thaanmun Thurum

When one resolves to raise his race Loin girt up God leads his ways

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

SP (சாலமன் பாப்பையா)

என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.

MK (மு.கருணாநிதி)

தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்

Couplet

'I'll make my race renowned,' if man shall say,With vest succinct the goddess leads the way

Explanation

The Deity will clothe itself and appear before him who resolves on raising his family