thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalகுடிசெயல் வகைKutiseyalvakai
குறள் 1024

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்

தாழாது உஞற்று பவர்க்கு.

Soozhaamal Thaane Mutiveydhum Thamkutiyaith

Thaazhaadhu Ugnatru Pavarkku

Who raise their races with ceaseless pain No need for plan; their ends will gain

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.

SP (சாலமன் பாப்பையா)

தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.

MK (மு.கருணாநிதி)

தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்

Couplet

Who labours for his race with unremitting pain,Without a thought spontaneously, his end will gain

Explanation

Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed