thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்KudiyiyalநாணுடைமைNaanutaimai
குறள் 1016

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்

பேணலர் மேலா யவர்.

Naanveli Kollaadhu Manno Viyangnaalam

Penalar Melaa Yavar

The great refuse the wonder-world Without modesty's hedge and shield

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.

SP (சாலமன் பாப்பையா)

பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

MK (மு.கருணாநிதி)

பரந்த இந்த உலகில் பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள்

Couplet

Unless the hedge of shame inviolate remain,For men of lofty soul the earth's vast realms no charms retain

Explanation

The great make modesty their barrier (of defence) and not the wide world