பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.
Pirarpazhiyum Thampazhiyum Naanuvaar Naanukku
Uraipadhi Ennum Ulaku
In them resides the sense of shame Who blush for their and other's blame
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.
SP (சாலமன் பாப்பையா)
தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.
MK (மு.கருணாநிதி)
தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்
Couplet
As home of virtuous shame by all the world the men are known,Who feel ashamed for others, guilt as for their own
Explanation
The world regards as the abode of modesty him who fear his own and other's guilt