thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்KudiyiyalநாணுடைமைNaanutaimai
குறள் 1014

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்

பிணிஅன்றோ பீடு நடை.

Aniandro Naanutaimai Saandrorkku Aqdhindrel

Piniandro Peetu Natai

Shame is the jewel of dignity Shameless swagger is vanity

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.

SP (சாலமன் பாப்பையா)

நாணம்‌ இருப்பது சான்றோர்க்கு ஆபரணம்; அது மட்டும் இல்‌லை என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம்.

MK (மு.கருணாநிதி)

நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும் அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்

Couplet

And is not shame an ornament to men of dignity?Without it step of stately pride is piteous thing to see

Explanation

Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others)