thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்KudiyiyalநாணுடைமைNaanutaimai
குறள் 1017

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்

நாண்துறவார் நாணாள் பவர்.

Naanaal Uyiraith Thurappar Uyirpporuttaal

Naandhuravaar Naanaal Pavar

For shame their life the shame-sensed give Loss of shame they won't outlive

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.

SP (சாலமன் பாப்பையா)

நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்‌.

MK (மு.கருணாநிதி)

நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்

Couplet

The men of modest soul for shame would life an offering make,But ne'er abandon virtuous shame for life's dear sake

Explanation

The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life