thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalமானம்Maanam
குறள் 967

ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று.

Ottaarpin Sendroruvan Vaazhdhala�n Annilaiye

Kettaan Enappatudhal Nandru

Better it is to die forlorn Than live as slaves of those who scorn

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.

SP (சாலமன் பாப்பையா)

இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.

MK (மு.கருணாநிதி)

தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்

Couplet

Better 'twere said, 'He's perished!' than to gainThe means to live, following in foeman's train

Explanation

It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him