thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalமானம்Maanam
குறள் 966

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று

இகழ்வார்பின் சென்று நிலை.

Pukazhindraal Puththelnaattu Uyyaadhaal Enmatru

Ikazhvaarpin Sendru Nilai

Why fawn on men that scorn you here It yields no fame, heaven's bliss neither

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.

SP (சாலமன் பாப்பையா)

உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?

MK (மு.கருணாநிதி)

இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?

Couplet

It yields no praise, nor to the land of Gods throws wide the gate:Why follow men who scorn, and at their bidding wait

Explanation

Why follow men who scorn, and at their bidding wait?