thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalமருந்துMarundhu
குறள் 950

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற் கூற்றே மருந்து.

Utravan Theerppaan Marundhuzhaich Chelvaanendru

Appaal Naar Kootre Marundhu

Patient, doctor, medicine and nurse Are four-fold codes of treating course

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.

SP (சாலமன் பாப்பையா)

நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.

MK (மு.கருணாநிதி)

நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது

Couplet

For patient, leech, and remedies, and him who waits by patient's side,The art of medicine must fourfold code of laws provide

Explanation

Medical science consists of four parts, viz, patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions