thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalமருந்துMarundhu
குறள் 949

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்.

Utraan Alavum Piniyalavum Kaalamum

Katraan Karudhich Cheyal

Let the skilful doctor note The sickmen, sickness, season and treat

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.

MK (மு.கருணாநிதி)

நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்

Couplet

The habitudes of patient and disease, the crises of the illThese must the learned leech think over well, then use his skill

Explanation

The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment)