thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்NatpiyalசூதுSoodhu
குறள் 938

பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து

அல்லல் உழப்பிக்கும் சூது.

Porul Ketuththup Poimer Koleei

Arulketuththu Allal Uzhappikkum Soodhu

Game ruins wealth and spoils grace Leads to lies and wretched woes

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.

SP (சாலமன் பாப்பையா)

சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.

MK (மு.கருணாநிதி)

பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது

Couplet

Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives awayAll grace, and leaves the man to utter misery a prey

Explanation

Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter)