thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalகள்ளுண்ணாமைKallunnaamai
குறள் 929

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

Kaliththaanaik Kaaranam Kaattudhal Keezhneerk

Kuliththaanaith Theeththureei Atru

Can torch search one in water sunk? Can reason reach the raving drunk?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.

SP (சாலமன் பாப்பையா)

போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்.

MK (மு.கருணாநிதி)

குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்

Couplet

Like him who, lamp in hand, would seek one sunk beneath the waveIs he who strives to sober drunken man with reasonings grave

Explanation

Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man