thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalகள்ளுண்ணாமைKallunnaamai
குறள் 928

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து

ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

Kaliththariyen Enpadhu Kaivituka Nenjaththu

Oliththadhooum Aange Mikum

Don't say I'm not a drunkard hard The hidden fraud is known abroad

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.

SP (சாலமன் பாப்பையா)

போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும்.

MK (மு.கருணாநிதி)

மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்

Couplet

No more in secret drink, and then deny thy hidden fraud;What in thy mind lies hid shall soon be known abroad

Explanation

Let (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal