thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஇனியவை கூறல்Iniyavaikooral
குறள் 91

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

Insolaal Eeram Alaiip Patiruilavaam

Semporul Kantaarvaaich Chol

The words of Seers are lovely sweet Merciful and free from deceit

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

SP (சாலமன் பாப்பையா)

அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

MK (மு.கருணாநிதி)

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்

Couplet

Pleasant words are words with all pervading love that burn;Words from his guileless mouth who can the very truth discern

Explanation

Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous