thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபெண்வழிச் சேறல்Penvazhichcheral
குறள் 902

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்

நாணாக நாணுத் தரும்.

Penaadhu Penvizhaivaan Aakkam Periyadhor

Naanaaka Naanuth Tharum

Who dotes, unmanly, on his dame His wealth to him and all is shame

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.

SP (சாலமன் பாப்பையா)

தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.

MK (மு.கருணாநிதி)

எற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்

Couplet

Who gives himself to love of wife, careless of noble nameHis wealth will clothe him with o'erwhelming shame

Explanation

The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause great shame (to ali men) and to himself;