thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபெண்வழிச் சேறல்Penvazhichcheral
குறள் 901

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்

வேண்டாப் பொருளும் அது.

Manaivizhaivaar Maanpayan Eydhaar Vinaivizhaiyaar

Ventaap Porulum Adhu

Who dote on wives lose mighty gain That lust, dynamic men disdain

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.

SP (சாலமன் பாப்பையா)

மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.

MK (மு.கருணாநிதி)

கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்

Couplet

Who give their soul to love of wife acquire not nobler gain;Who give their soul to strenuous deeds such meaner joys disdain

Explanation

Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth