பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபெரியாரைப் பிழையாமைPeriyaaraip Pizhaiyaamai
குறள் 899
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
Endhiya Kolkaiyaar Seerin Itaimurindhu
Vendhanum Vendhu Ketum
Before the holy sage's rage Ev'n Indra's empire meets damage
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.
SP (சாலமன் பாப்பையா)
உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.
MK (மு.கருணாநிதி)
உயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்
Couplet
When blazes forth the wrath of men of lofty fame,Kings even fall from high estate and perish in the flame
Explanation
Kings even fall from high estate and perish in the flame