thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalபெரியாரைப் பிழையாமைPeriyaaraip Pizhaiyaamai
குறள் 898

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு

நின்றன்னார் மாய்வர் நிலத்து.

Kundrannaar Kundra Madhippin Kutiyotu

Nindrannaar Maaivar Nilaththu

When hill-like sages are held small The firm on earth lose home and all

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.

SP (சாலமன் பாப்பையா)

மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.

MK (மு.கருணாநிதி)

மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்

Couplet

If they, whose virtues like a mountain rise, are light esteemed;They die from earth who, with their households, ever-during seemed

Explanation

If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth