thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்NatpiyalபேதைமைPedhaimai
குறள் 835

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான்புக் கழுந்தும் அளறு.

Orumaich Cheyalaatrum Pedhai Ezhumaiyum

Thaanpuk Kazhundhum Alaru

The fool suffers seven fold hells In single birth of hellish ills

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.

SP (சாலமன் பாப்பையா)

அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.

MK (மு.கருணாநிதி)

தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்

Couplet

The fool will merit hell in one brief life on earth,In which he entering sinks through sevenfold round of birth

Explanation

A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births