thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்NatpiyalபேதைமைPedhaimai
குறள் 834

ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்.

Odhi Unarndhum Pirarkkuraiththum Thaanatangaap

Pedhaiyin Pedhaiyaar Il

No fool equals the fool who learns Knows, teaches, but self-control spurns

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.

MK (மு.கருணாநிதி)

படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது

Couplet

The sacred law he reads and learns, to other men expounds,-Himself obeys not; where can greater fool be found

Explanation

There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching