பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalகூடா நட்புKootaanatpu
குறள் 825
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.
Manaththin Amaiyaa Thavarai Enaiththondrum
Sollinaal Therarpaatru Andru
Do not trust in what they tell Whose mind with your mind goes ill
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.
SP (சாலமன் பாப்பையா)
மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது.
MK (மு.கருணாநிதி)
மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது
Couplet
When minds are not in unison, 'its never; just,In any words men speak to put your trust
Explanation
In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart