thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalகூடா நட்புKootaanatpu
குறள் 824

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப் படும்.

Mukaththin Iniya Nakaaa Akaththinnaa

Vanjarai Anjap Patum

Fear foes whose face has winning smiles Whose heart is full of cunning guiles

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.

MK (மு.கருணாநிதி)

சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்

Couplet

'Tis fitting you should dread dissemblers' guile,Whose hearts are bitter while their faces smile

Explanation

One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart