thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalநட்பாராய்தல்Natpaaraaidhal
குறள் 795

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய

வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

Azhachcholli Alladhu Itiththu Vazhakkariya

Vallaarnatapu Aaindhu Kolal

Who make you weep and chide wrong trends And lead you right are worthy friends

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.

MK (மு.கருணாநிதி)

தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்

Couplet

Make them your chosen friend whose words repentance move,With power prescription's path to show, while evil they reprove

Explanation

You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach