thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஅன்புடைமைAnputaimai
குறள் 78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று.

Anpakath Thillaa Uyirvaazhkkai Vanpaarkan

Vatral Marandhalirth Thatru

Life bereft of love is gloom Can sapless tree in desert bloom?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

SP (சாலமன் பாப்பையா)

மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.

MK (மு.கருணாநிதி)

மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது

Couplet

The loveless soul, the very joys of life may know,When flowers, in barren soil, on sapless trees, shall blow

Explanation

The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert