thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஅன்புடைமைAnputaimai
குறள் 77

என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்.

Enpi Ladhanai Veyilpolak Kaayume

Anpi Ladhanai Aram

Justice burns the loveless form Like solar blaze the boneless worm

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

SP (சாலமன் பாப்பையா)

எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.

MK (மு.கருணாநிதி)

அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்

Couplet

As sun's fierce ray dries up the boneless things,So loveless beings virtue's power to nothing brings

Explanation

Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, ie worms