thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகூழியல்Koozhiyalபொருள் செயல்வகைPorulseyalvakai
குறள் 758

குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை.

Kundreri Yaanaip Por Kantatraal

Thankaiththondru Untaakach Cheyvaan Vinai

Treasures in hand fulfil all things Like hill-tuskers the wars of kings

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.

SP (சாலமன் பாப்பையா)

தன் கையிலே பணம் இருக்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, ஒருவன் மலை மேல் ஏறி நின்று யானைச் சண்டையைக் கண்டது போலாம்.

MK (மு.கருணாநிதி)

தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது

Couplet

As one to view the strife of elephants who takes his stand,On hill he's climbed, is he who works with money in his hand

Explanation

An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-top