thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகூழியல்Koozhiyalபொருள் செயல்வகைPorulseyalvakai
குறள் 757

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு.

Arulennum Anpeen Kuzhavi Porulennum

Selvach Cheviliyaal Untu

Grace the child of love is nourished By the wet-nurse of wealth cherished

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.

SP (சாலமன் பாப்பையா)

அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும்.

MK (மு.கருணாநிதி)

அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்

Couplet

'Tis love that kindliness as offspring bears:And wealth as bounteous nurse the infant rears

Explanation

The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth