thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஅன்புடைமைAnputaimai
குறள் 74

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

Anpu Eenum Aarvam Utaimai

Adhueenum Nanpu Ennum Naataach

Love yields aspiration and thence Friendship springs up in excellence

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்

SP (சாலமன் பாப்பையா)

குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்

MK (மு.கருணாநிதி)

அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்

Couplet

From love fond yearning springs for union sweet of minds;And that the bond of rare excelling friendship binds

Explanation

Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship