thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஅன்புடைமைAnputaimai
குறள் 73

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.

Anpotu Iyaindha Vazhakkenpa Aaruyirkku

Enpotu Iyaindha Thotarpu

Soul is encased in frame of bone To taste the life of love alone

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

SP (சாலமன் பாப்பையா)

பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்

MK (மு.கருணாநிதி)

உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்

Couplet

Of precious soul with body's flesh and bone,The union yields one fruit, the life of love alone

Explanation

They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth)