thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalஅவை அஞ்சாமைAvaiyanjaamai
குறள் 729

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்

நல்லா ரவையஞ்சு வார்.

Kallaa Thavarin Kataiyenpa Katrarindhum

Nallaa Ravaiyanju Vaar

Who fear to face good assembly Are learned idiots, certainly

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.

SP (சாலமன் பாப்பையா)

நூல்களைக் கற்றும் அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர் கூடிய அவையைக் கண்டு பயந்து அங்கே செல்லாதவர், படிக்காதவரைவிடக் கீழானவர் என்று சொல்லுவர்.

MK (மு.கருணாநிதி)

ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களாவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்

Couplet

Who, though they've learned, before the council of the good men quake,Than men unlearn'd a lower place must take

Explanation

They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate