thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalஅவை அஞ்சாமைAvaiyanjaamai
குறள் 728

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்

நன்கு செலச்சொல்லா தார்.

Pallavai Katrum Payamilare Nallavaiyul

Nanku Selachchollaa Thaar

Though learned much his lore is dead Who says no good before the good

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.

SP (சாலமன் பாப்பையா)

நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.

MK (மு.கருணாநிதி)

அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை

Couplet

Though many things they've learned, yet useless are they all,To man who cannot well and strongly speak in council hall

Explanation

Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements