thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalகுறிப்பறிதல்Kuripparidhal
குறள் 702

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்

தெய்வத்தோ டொப்பக் கொளல்.

Aiyap Pataaadhu Akaththadhu Unarvaanaith

Theyvaththo Toppak Kolal

Take him as God who reads the thought Of another man with without a doubt

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.

MK (மு.கருணாநிதி)

ஒருவன் மனத்தில் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்

Couplet

Undoubting, who the minds of men can scan,As deity regard that gifted man

Explanation

He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind)