thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalகுறிப்பறிதல்Kuripparidhal
குறள் 701

கூறாமை நோக்க஧க் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக் கணி.

Kooraamai Nokkake Kuripparivaan Egngnaandrum

Maaraaneer Vaiyak Kani

Who reads the mind by look, untold Adorns the changeless sea-girt world

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.

SP (சாலமன் பாப்பையா)

ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்கு ஆபரணம் போன்றவன்.

MK (மு.கருணாநிதி)

ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கே அணியாவான்

Couplet

Who knows the sign, and reads unuttered thought, the gem is he,Of earth round traversed by the changeless sea

Explanation

The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea