thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்AmaichiyalதூதுThoodhu
குறள் 687

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து

எண்ணி உரைப்பான் தலை.

Katanarindhu Kaalang Karudhi Itanarindhu

Enni Uraippaan Thalai

Knowing duty time and place The envoy employs mature phrase

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.

SP (சாலமன் பாப்பையா)

தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன்.

MK (மு.கருணாநிதி)

ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்

Couplet

He is the best who knows what's due, the time considered well,The place selects, then ponders long ere he his errand tell

Explanation

He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due)