thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்AmaichiyalதூதுThoodhu
குறள் 686

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்

தக்கது அறிவதாம் தூது.

Katrukkan Anjaan Selachchollik Kaalaththaal

Thakkadhu Arivadhaam Thoodhu

Learned; fearless, the envoy tends Convincing words which time demands

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.

SP (சாலமன் பாப்பையா)

அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்.

MK (மு.கருணாநிதி)

கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்

Couplet

An envoy meet is he, well-learned, of fearless eyeWho speaks right home, prepared for each emergency

Explanation

He is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time