thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்AmaichiyalதூதுThoodhu
குறள் 684

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு.

Arivuru Vaaraaindha Kalviim Moondran

Serivutaiyaan Selka Vinaikku

Who has these three: good form, sense, lore Can act as bold ambassador

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.

SP (சாலமன் பாப்பையா)

இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க.

MK (மு.கருணாநிதி)

தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்

Couplet

Sense, goodly grace, and knowledge exquisiteWho hath these three for envoy's task is fit

Explanation

He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three viz, (natural) sense, an attractive bearing and well-tried learning