thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்AmaichiyalதூதுThoodhu
குறள் 683

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்

வென்றி வினையுரைப்பான் பண்பு.

Noolaarul Noolvallan Aakudhal Velaarul

Vendri Vinaiyuraippaan Panpu

Savant among savants, he pleads Before lanced king, triumphant words

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

SP (சாலமன் பாப்பையா)

அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.

MK (மு.கருணாநிதி)

வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்

Couplet

Mighty in lore amongst the learned must he be,Midst jav'lin-bearing kings who speaks the words of victory

Explanation

To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks