துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
Thunpam Uravarinum Seyka Thunivaatri
Inpam Payakkum Vinai
Do with firm will though pains beset The deed that brings delight at last
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.
SP (சாலமன் பாப்பையா)
ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.
MK (மு.கருணாநிதி)
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்
Couplet
Though toil and trouble face thee, firm resolve hold fast,And do the deeds that pleasure yield at last
Explanation
Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end)