thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalவினைத்திட்பம்Vinaiththitpam
குறள் 668

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது

தூக்கங் கடிந்து செயல்.

Kalangaadhu Kanta Vinaikkan Thulangaadhu

Thookkang Katindhu Seyal

Waver not; do wakefully The deed resolved purposefully

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.

MK (மு.கருணாநிதி)

மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்

Couplet

What clearly eye discerns as right, with steadfast will,And mind unslumbering, that should man fulfil

Explanation

An act that has been firmly resolved on must be as firmly carried out without delay