ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் க
சான்றோர் பழிக்கும் வினை.
Eendraal Pasikaanpaan Aayinunj Cheyyarka
Saandror Pazhikkum Vinai
Though she who begot thee hungers Shun acts denounced by ancient seers
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.
SP (சாலமன் பாப்பையா)
தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.
MK (மு.கருணாநிதி)
பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது
Couplet
Though her that bore thee hung'ring thou behold, no deedDo thou, that men of perfect soul have crime decreed
Explanation
Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt)