thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalவினைத் தூய்மைVinaiththooimai
குறள் 652

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை.

Endrum Oruvudhal Ventum Pukazhotu

Nandri Payavaa Vinai

Eschew always acts that do not Bring good nor glory on their part

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.

MK (மு.கருணாநிதி)

புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்

Couplet

From action evermore thyself restrainOf glory and of good that yields no gain

Explanation

Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future)