thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalசொல்வன்மைSolvanmai
குறள் 642

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

Aakkamung Ketum Adhanaal Varudhalaal

Kaaththompal Sollinkat Sorvu

Since gain or ruin speeches bring Guard against the slips of tongue

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்

SP (சாலமன் பாப்பையா)

அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக.

MK (மு.கருணாநிதி)

ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்

Couplet

Since gain and loss in life on speech depend,From careless slip in speech thyself defend

Explanation

Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein