thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅமைச்சியல்Amaichiyalசொல்வன்மைSolvanmai
குறள் 641

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று.

Naanalam Ennum Nalanutaimai Annalam

Yaanalaththu Ulladhooum Andru

The goodness called goodness of speech Is goodness which nothing can reach

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.

SP (சாலமன் பாப்பையா)

நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.

MK (மு.கருணாநிதி)

சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்

Couplet

A tongue that rightly speaks the right is greatest gain,It stands alone midst goodly things that men obtain

Explanation

The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness