அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
Amizhdhinum Aatra Inidhedham Makkal
Sirukai Alaaviya Koozh
The food is more than nectar sweet In which one's children hands insert
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
SP (சாலமன் பாப்பையா)
தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.
MK (மு.கருணாநிதி)
சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது
Couplet
Than God's ambrosia sweeter far the food before men laid,In which the little hands of children of their own have play'd
Explanation
The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia