thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalமக்கட்பேறுPudhalvaraip Perudhal
குறள் 63

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்.

Thamporul Enpadham Makkal Avarporul

Thamdham Vinaiyaan Varum

Children are one's wealth indeed Their wealth is measured by their deed

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

SP (சாலமன் பாப்பையா)

பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.

MK (மு.கருணாநிதி)

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை

Couplet

'Man's children are his fortune,' say the wise;From each one's deeds his varied fortunes rise

Explanation

Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf