thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalமடி இன்மைMatiyinmai
குறள் 609

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்

மடியாண்மை மாற்றக் கெடும்.

Kutiyaanmai Yulvandha Kutram Oruvan

Matiyaanmai Maatrak Ketum

The blots on race and rule shall cease When one from sloth gets his release

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.

SP (சாலமன் பாப்பையா)

ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.

MK (மு.கருணாநிதி)

தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்

Couplet

Who changes slothful habits savesHimself from all that household rule depraves

Explanation

When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear